என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுவையில் 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு- கல்வித்துறை அறிவிப்பு
Byமாலை மலர்17 Jan 2022 9:22 AM GMT (Updated: 17 Jan 2022 9:22 AM GMT)
புதுவையில் 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற (புதன்கிழமை) முதல் தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வையும் தமிழக அரசு ஒத்திவைத்தது. புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதுவை கல்வித்துறை தயாரிக்கும் வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வருகிற (19-ந்தேதி) தொடங்க இருந்த திருப்புதல் தேர்வை புதுவை அரசின் கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X