search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு- கல்வித்துறை அறிவிப்பு

    புதுவையில் 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி: 

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற (புதன்கிழமை)  முதல் தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வையும் தமிழக அரசு ஒத்திவைத்தது. புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதுவையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. 

    இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதுவை கல்வித்துறை தயாரிக்கும் வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில்  வருகிற (19-ந்தேதி) தொடங்க இருந்த திருப்புதல் தேர்வை புதுவை அரசின் கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. 

    இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×