search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு 3 பேர் பலி- பரிசோதனை செய்தவர்களில் 57 சதவீதத்தினருக்கு தொற்று

    புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில்  ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பரிசோதனையில் 57 சதவீதமாகும். புதுவையில் 801, காரைக்காலில் 77, ஏனாமில் 8, மாகியில் 21 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வரு கின்றனர். 

    புதுவையில் 83, காரைக்காலில் 26, ஏனாமில் 4, மாகியில் 17 பேர் என 130 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 72, காரைக்காலில் 59, மாகியில் 16 பேர் என 147 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 617 பேர் கொரோனா   தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து  28 ஆயிரத்து 168 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 7 ஆயிரத்து 295, காரைக்காலில் 754, ஏனாமில் 57, மாகியில் 123 பேர் என 8 ஆயிரத்து 229 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநி லத்தில் இப்போது 8 ஆயிரத்து 359 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். 

    புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த 85 வயது முதியவர், ரெட்டி யார்பாளையத்தை சேர்ந்த 65 வயது பெண், காரைக்காலை சேர்ந்த 67 வயது ஆண் ஆகியோர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 890 ஆக உயர்ந் துள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 97 ஆயிரத்து 771 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கையோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×