என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களையிழந்து காணப்பட்ட காணும் பொங்கல்
Byமாலை மலர்17 Jan 2022 6:33 AM GMT (Updated: 17 Jan 2022 6:33 AM GMT)
அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
அரியலூர் :
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 முதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் பொது ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள், கோவில்களில் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரியலூர் மாவட்டத்தில் முழு பொது ஊரடங்கு கடைபிடிக் கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காணும் பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையின் போது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோவில், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர் செட்டி ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சிற்றுண்டி அருந்தி விளையாடி மகிழ்வர். சிறு குழந்தைகள் இந்நாளை மிகவும் குதூகலமாக கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் வந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X