என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பறவைகளுக்கான மியாவாக்கி குறுங்காடு
Byமாலை மலர்13 Jan 2022 10:15 AM GMT (Updated: 13 Jan 2022 10:15 AM GMT)
குத்தாலம் அருகே மியாவாக்கி முறையில் பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரிவளூர் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் மூலம் 12,000 சதுரடியில் 35 வகையான 1200 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் பறவைகளுக்காக குறுங்காடு அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு மரகன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை துவக்கி வைத்து மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும். பறவைகளுக்கான குறுங்காடுகளின் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இதில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி, ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் ஜெகன்மோகன், ஐசிஐசிஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால், ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்குறுங்காட்டினை வனம் கலைமணி தலைமையிலான தன்னார்வ குழுவினர் வடிவமைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X