search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மரக்கன்றுகளை நட்டார்.
    X
    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மரக்கன்றுகளை நட்டார்.

    பறவைகளுக்கான மியாவாக்கி குறுங்காடு

    குத்தாலம் அருகே மியாவாக்கி முறையில் பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கப்பட்டது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரிவளூர் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் மூலம் 12,000 சதுரடியில் 35 வகையான 1200 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் பறவைகளுக்காக குறுங்காடு அமைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு மரகன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை துவக்கி வைத்து மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும். பறவைகளுக்கான குறுங்காடுகளின் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

    இதில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி, ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் ஜெகன்மோகன், ஐசிஐசிஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால், ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இக்குறுங்காட்டினை வனம் கலைமணி தலைமையிலான தன்னார்வ குழுவினர் வடிவமைத்தனர்.
    Next Story
    ×