என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா விதி மீறினால் மாடு விடும் விழா ரத்து செய்யப்படும்
Byமாலை மலர்12 Jan 2022 9:47 AM GMT (Updated: 12 Jan 2022 9:47 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் கொரோனா விதி மீறினால் மாடு விடும் விழா ரத்து செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:&
பொங்கல் பண்டிகையையொட்டி நமது பண்பாடு கலாசாரத்திற்காகவும் நமது ஊரின் கவுரவத்திற்காகவும் மாடு விடும் விழா நடத்தப் படுகிறது.
கொரோனா அதிகரித்துவரும் நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை விழாக்குழுவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மாடு விடும் விழா நடைபெறும் இடம் பெரிய மைதானமாக காலியிடமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக பார்வையாளர்கள் 150 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.
ஒருவேளை பெரிய கிராமமாக இருந்தால் வெளியூர்க்காரர்கள் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்க மாட்டோம். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே காளைகளை விடவேண்டும்.
3 மணிக்கு மேல் ஒரு காளை கூட விட அனுமதிக்க மாட்டோம் ஒரு விழாவில் 100 காளைகளுக்கு மேல் விட வேண்டாம். விழாக்குழுவினர் ஒரு காளையை ஒரே ஒரு விழாவில் மட்டுமே பங்கேற்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.
மாடு விடும் விழா மூலம் கொரோனா பரவி விடக்கூடாது. இதில் விழாக்குழுவினர் முழு கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் மாடு விடும் விழாவின்போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் மாடு விடும் விழா ரத்து செய்யப்படும். ஒரு கிராமத்தில் விதியை மீறினால் அடுத்து விழா நடத்த அனுமதி வழங்க மாட்டோம்.
ஜல்லிக்கட்டு, மாடு விடும் விழா போன்றவை நடத்துவதற்கு எப்படி ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டீர்களோ அதேபோல கொரோனா பரவாமல் கட்டுக்கோப்புடன் மாடு விடும் விழா நடத்த அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி டி.எஸ்.பி.க்கள் பழனி, ராமமூர்த்தி, தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மாடு விடும் விழாக்குழுவினர் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X