என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா மையத்தில் கலெக்டர் ஆய்வு
வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
சீர்காழி:
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று
காரணமாக தமிழக அரசு சார்பில் ஊரடங்கு உள்ளிட்ட
பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வகைப்படுத்தும்
மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி வட்டத்தில் கோபாலசமுத்திரம் கிராமத்தில் சமுதாயக்கூடம் ,சீர்காழி நகரில் உள்ள டி.எஸ்.எம்.துவக்கப்பள்ளி, வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை
செய்து வகைப்படுத்தி சரியான சிகிச்சை மையத்திற்கு
தொற்றாளர்களை அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த
மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வைத்தீஸ்வரன்கோவில்
அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு அடிப்படை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்
தேவை மற்றும் படுக்கை வசதிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர்
பிரதாப்குமார், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன்,
வட்டாட்சியர் சண்முகம்,வைதீஸ்வரன் கோவில் தலைமை
மருத்துவர் காசி விஸ்வநாதன், வைத்தீஸ்வரன் கோவில்
கொரோனா வார்டு சிறப்பு மருத்துவர் ராஜ்பாபு, திருவெண்காடு
வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் உள்ளிட்ட
அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story






