search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் ஜோடி
    X
    காதல் ஜோடி

    புதுவை பாரதி பூங்காவில் புதர்களில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள் விரட்டியடிப்பு

    புதுவை பாரதி பூங்காவில் புதர்களில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுவைக்கு தினமும் கடலூர்- விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    அப்படி வருகை தரும் சுற்றுலா பயணிகள் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

    பாரதி பூங்காவில் காலை மற்றும் மாலை வேளையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாரதி பூங்காவை சுற்றிலும் உள்ள புதர்களில் ஆங்காங்கே காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்து அத்துமீறலில் ஈடுபட்டனர்.

    இந்த செயல் அங்கு பொழுது போக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார் பாரதி பூங்காவில் செடி- கொடிகள் மற்றும் புதரில் ஆங்காங்கே பதுங்கியிருந்த காதல் ஜோடிகளை விரட்டியடித்தனர். இவர்களில் பள்ளி, கல்லூரி சீருடையில் காதல் ஜோடிகளையும் காண முடிந்தது.

    காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×