என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
பெரம்பலூரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி முதற்கட்டமாக வரை 2,218 சுகாதார பணியாளர்களுக்கும், 2,132 முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களில் 1,698 பேருக்கும் என மொத்தம் 6,048 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
பெரம்பலூர்:
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 15 வயது, அதற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் பரவுவதால் மத்திய அரசு 3-ம் தவணையாக முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி அறிமுகப்படுத்தி, அதனை முதற்கட்டமாக ஜனவரி 10-ந்தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த உத்தரவிட்டது.
அதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி முதற்கட்டமாக வரை 2,218 சுகாதார பணியாளர்களுக்கும், 2,132 முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களில் 1,698 பேருக்கும் என மொத்தம் 6,048 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதில் நேற்றைய தேதியில் 2,925 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்ட தேதியில் இருந்து 273 நாட்கள் அல்லது 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் முடிவடைந்த சுகாதார பணியாளர்களும், முன்களப்பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 15 வயது, அதற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் பரவுவதால் மத்திய அரசு 3-ம் தவணையாக முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி அறிமுகப்படுத்தி, அதனை முதற்கட்டமாக ஜனவரி 10-ந்தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த உத்தரவிட்டது.
அதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி முதற்கட்டமாக வரை 2,218 சுகாதார பணியாளர்களுக்கும், 2,132 முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களில் 1,698 பேருக்கும் என மொத்தம் 6,048 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதில் நேற்றைய தேதியில் 2,925 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்ட தேதியில் இருந்து 273 நாட்கள் அல்லது 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் முடிவடைந்த சுகாதார பணியாளர்களும், முன்களப்பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
Next Story






