search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி
    X
    சுங்கச்சாவடி

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வண்டலூர்-நெமிலிச்சேரி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.66, சரக்கு வாகனத்துக்கு ரூ.107, பஸ்களுக்கு ரூ.224, கனரக வாகனத்துக்கு ரூ.351, பெரிய கனரக வாகனத்துக்கு ரூ.428 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 60 கி.மீ தூரத்துக்கு ரூ.2156 கோடியில் வெளி வட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வெளி வட்ட சாலை ஒவ்வொரு பகுதிகள் வாரியாக படிப்படியாக திறக்கப்பட்டன. இந்த வெளி வட்டச்சாலையில் போக்கு வரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்கின்றன.

    இந்த சாலையில் இது வரை கட்டணம் இன்றி வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் முடிச்சூர் அருகே வரத ராஜபுரம், நசரத்பேட்டை அருகே கோலப்பன்சேரி, நெமிலிச்சேரி அருகே பாலவேடு, மீஞ்சூர் அருகே சின்ன முல்லைவாயல் ஆகிய 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 4 சுங்கச்சாவடிகளிலும் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கியது. வாகனங்களுக்கு ஏற்றார்போல குறைந்தபட்சமாக ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.865 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வண்டலூரில் இருந்து மீஞ்சூருக்கு கார் சென்றுவர அதிகபட்சமாக ரூ.163 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர அதிகபட்சமாக ரூ.865 நிர்ணயிக்கப்பட் டுள்ளது. வண்டலூர்-நசரத்பேட்டை சுங்கச்சாவடி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.47, சரக்கு வாகனத்துக்கு ரூ.75, பஸ்களுக்கு ரூ.158, கனரக வாகனங்களுக்கு ரூ.301 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வண்டலூர்-நெமிலிச்சேரி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.66, சரக்கு வாகனத்துக்கு ரூ.107, பஸ்களுக்கு ரூ.224, கனரக வாகனத்துக்கு ரூ.351, பெரிய கனரக வாகனத்துக்கு ரூ.428 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப்களுக்கு ரூ.91, சரக்கு வாகனத்துக்கு ரூ.148, பஸ்களுக்கு ரூ.309, கனரக வாகனத்துக்கு ரூ.590 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர்-மீஞ்சூர் இடையே கார், ஜீப்களுக்கு ரூ.109, சரக்கு வாகனத்துக்கு ரூ.175, பஸ்களுக்கு ரூ.368, கனரக வாகனத்துக்கு ரூ.576 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வண்டலூரில் இருந்து மீஞ்சூர் சென்று திரும்பிவர கார், ஜீப்களுக்கு ரூ.163, சரக்கு வாகனத்துக்கு ரூ.263, பஸ்களுக்கு ரூ.551, கனரக வாகனத்துக்கு ரூ.865 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நசரத்பேட்டை-நெமிலிச்சேரி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.20, சரக்கு வாகனத்துக்கு ரூ.32, பஸ்களுக்கு ரூ.104, கனரக வாகனத்துக்கு ரூ.126 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ் நாடு சாலை மேம்பாடு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச்சாலை காரணமாக சென்னை மாநகருக்கு பல்வேறு திசைகளில் இருந்து வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர், துறைமுகம், புறநகர் தொழிற் சாலைகளுக்கு எளிதாக சென்றடைய முடியும். வாக னங்கள் மற்றும் தூரத்துக்கு ஏற்றார்போல் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    பாஸ்டேக் வசதி உள்ள வாகனங்கள் தனியாக கட்டணம் செலுத்தும் ஏற்பாடுகளும் மற்ற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தனி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

    இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக வாகனங்கள் மற்றும் லாரி தொழில் முடங்கி உள்ளன. மற்றொரு புறம் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. அத்தியா வசிய பொருட்களின்

    விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய நுழைவு பகுதியாக உள்ள வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது வாகன தொழில் செய்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா பாதிப்பு முடியும் வரையிலாவது 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×