என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த போதிலும், புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மதுபானக் கடைகள் நள்ளிரவு வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நள்ளிரவு வரை திறக்கப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று புதுச்சேரியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பள்ளி மாணவ- மாணவிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போது இந்தியாவில் 3 அலை உருவாகி கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு பள்ளிக மாணவர்களுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மேலும், வகுப்புகள் இணைய வழி மூலமாக பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Next Story






