என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோரிமேடு எல்லையில் தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பினர்
தமிழகத்தில் முழு ஊரடங்கு-புதுவை எல்லையில் போலீசார் சோதனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணி முதல் 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கடைகள், மால்கள், திரையரங்குகள் செயல்படவில்லை. பஸ்கள், ஆட்டோ, மெட்ரோ ரெயில் ஓடவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து புதுவை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
அதுபோல் புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் இயங்கவில்லை. இதனால் புதுவை பஸ் நிலையத்தின் பெரும்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. புதுவைக்குள் இயக்கப்படும் பஸ்கள் மட்டுமே புதுவையில் இயங்கியது. புதுவை மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என புதுவை சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
ஆனால், மாநில எல்லைகளான கனக செட்டிக்குளம், கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை, உள்ளிட்ட பகுதிகளில் எந்த பரிசோதனையும் செய்யப் படவில்லை. ஆனால், எல்லைப் பகுதியில் தமிழக போலீசார் சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து செல்லும் வாகனங்களை தமிழக பகுதிக்குள் நுழைய தடை விதித்தனர்.
மருத்துவம், அரசு பணி மற்றும் அத்தியாவசிய பணிக்காக செல்லும் வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். இதனால் மாநில எல்லைகளில் தமிழக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
விதிமுறைகளை மீறுபவர்கள், முககவசம் அணியாதவர்களிடம் தமிழக போலீசார் அபராதம் விதித்தனர்.
அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங் களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. வழக் கம் போல புதுவைக்குள் வாகனங்கள் வந்தன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் உள்ளவர்கள் புதுவைக்கு வருவது வழக்கம். அவர் களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
Next Story






