என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரொனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்த காட்சி.
    X
    கொரொனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்த காட்சி.

    கொரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
    அரியலூர்:
    அரியலூர் மாவட்டத்தில் ஓட்டக்கோவில், சாலையகுறிச்சி, இலுப்பையூர் பகுதிகளில் நடைபெற்ற 18 ஆவது கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் 17 ஆவது கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இது வரை முதல் தவணை தடுப்பூசி 6,38,231 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 4,30,756 நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது.

    18 ஆவது கட்டமாக மாபெரும் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 254 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட 7 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்குட்பட்ட 13 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 69 இடங்களிலும் என மொத்தம் 343 இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

    எனவே முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×