என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு.
    X
    ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு.

    கடல் அரிப்பை தடுக்க மீனவ கிராமங்களில் கருங்கல் தடுப்புச்சுவர்

    கடல் அரிப்பை தடுக்க மீனவ கிராமங்களில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்ககோரி ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு அளித்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே பெருந்தோட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் மோகனா ஜெய்சங்கர் தலைமையில் நாயக்கர் குப்பம், சாவடி குப்பம் மற்றும் மடத்துகுப்பம் ஆகிய மீனவ கிராம பொறுப்பாளர்கள் ஒன்றிய கவுன்சிலர் வள்ளி ஆகியோர் ராமலிங்கம் எம்.பியை சந்தித்து கோரிக்கை 
    மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, பெருந்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், சாவடி குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட 1000 மீனவ குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த மூன்று மீனவ கிராம மக்கள் சிறிய படகுகள் மூலம் 
    மீன்பிடி தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழில் இல்லாத காலங்களில் மீனவர்கள் தங்களுடைய படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். 

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 3 மீனவர் கிராமங்களில் 
    கடலரிப்பு அதிகரித்துக் காணப்படுவது மேற்கண்ட மூன்று கிராமங்களில் கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் கடற்கரையில் தங்களுடைய படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் மடத்துக்குப்பம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு 
    கடல்நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது. 

    இதனால் மீனவ குடியிருப்புகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு 3 மீனவ கிராமங்களில் உள்ள கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் 
    என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×