என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்- கொளத்தூர் மணி பங்கேற்பு
Byமாலை மலர்6 Jan 2022 9:10 AM GMT (Updated: 6 Jan 2022 9:10 AM GMT)
புதுவை திராவிடர் கழகம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை திராவிடர் கழகம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொளத்தூர் மணி பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பிரியன் வரவேற்றார். லோகு.அய்யப்பன் தலைமை வகித்தார். விஜயசங்கர் முன்னிலை வகித்தார். திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு பெருமாள், விடுதலை சிறுத்தை கட்சி தேவ.பொழிலன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, குணா உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
30 ஆண்டாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்ய சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியும், தமிழக அரசு பரிந்துரைத்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொளத்தூர் மணி கூறும்போது, 7 தமிழர்கள் விடுதலையை கடந்த செப்டம்பரிலேயே தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அமைச்சரவை முடிவை ஏற்க வேண்டியது கவர்னரின் கடமை.
கடந்த 7&ந் தேதி சுப்ரீம்கோர்ட்டும் இதுகுறித்து விமர்சித்துள்ளது. 7 தமிழர்கள் 2 ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக சிறைகளில் 2 ஆயுள் தண்டனை அனுபவித்த இஸ்லாமியர்கள் பலரும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலையையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பிரதமரை வைத்து தேசிய இளைஞர் விழாவை நடத்தக்கூடாது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X