search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி  பேசிய காட்சி.
    X
    ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி பேசிய காட்சி.

    தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்- கொளத்தூர் மணி பங்கேற்பு

    புதுவை திராவிடர் கழகம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை திராவிடர் கழகம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொளத்தூர் மணி பங்கேற்றார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பிரியன் வரவேற்றார். லோகு.அய்யப்பன் தலைமை வகித்தார். விஜயசங்கர் முன்னிலை வகித்தார். திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு பெருமாள், விடுதலை சிறுத்தை கட்சி தேவ.பொழிலன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, குணா உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். 

    30 ஆண்டாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்ய சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியும், தமிழக அரசு பரிந்துரைத்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொளத்தூர் மணி கூறும்போது, 7 தமிழர்கள் விடுதலையை கடந்த செப்டம்பரிலேயே தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அமைச்சரவை முடிவை ஏற்க வேண்டியது கவர்னரின் கடமை. 

    கடந்த 7&ந் தேதி சுப்ரீம்கோர்ட்டும் இதுகுறித்து விமர்சித்துள்ளது. 7 தமிழர்கள் 2 ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம். 

    தமிழக சிறைகளில் 2 ஆயுள் தண்டனை அனுபவித்த இஸ்லாமியர்கள் பலரும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலையையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

    புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பிரதமரை வைத்து தேசிய இளைஞர் விழாவை நடத்தக்கூடாது என தெரிவித்தார்.
    Next Story
    ×