என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையை வாலிபர் கடந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பு கல்லில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சூர்யா( வயது18). அதே பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலைபார்த்து வந்தார்.

    இவரது தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவரை பள்ளியில் விடுவதற்காக சூர்யா தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    சகோதரியை பள்ளியில் இறக்கி விட்டதும் அவர் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையை கடந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பு கல்லில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×