என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்14 Dec 2021 10:30 AM GMT (Updated: 14 Dec 2021 10:30 AM GMT)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செவிலியர் வீட்டில் 43 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வன். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் திருப்பதியில் கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா கிராம சுகாதார செலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புனிதாவிற்கு பணி உயர்விற்கான கவுன்சிலிங், சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி, கடந்த சனிக்கிழமை தனது கணவருடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். காலையில் பழனி செல்வனின் வீடு திறந்து இருப்பதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து சென்னையில் இருந்த பழனிசெல்வதிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்துசென்னையிலிருந்து கிளம்பிய பழனி செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த மாதம் தனது அண்ணனுக்கு நடைபெற உள்ள அறுபதாம் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம், நகை மற்றும் மகள்களுக்காக சேர்த்துவைத்த நகை என 43 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வன். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் திருப்பதியில் கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா கிராம சுகாதார செலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புனிதாவிற்கு பணி உயர்விற்கான கவுன்சிலிங், சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி, கடந்த சனிக்கிழமை தனது கணவருடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். காலையில் பழனி செல்வனின் வீடு திறந்து இருப்பதைக் கண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து சென்னையில் இருந்த பழனிசெல்வதிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்துசென்னையிலிருந்து கிளம்பிய பழனி செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த மாதம் தனது அண்ணனுக்கு நடைபெற உள்ள அறுபதாம் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம், நகை மற்றும் மகள்களுக்காக சேர்த்துவைத்த நகை என 43 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X