என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கடையூரில் நான்கு வழி சாலைக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
Byமாலை மலர்11 Dec 2021 9:00 AM GMT (Updated: 11 Dec 2021 9:00 AM GMT)
திருக்கடையூரில் நான்கு வழி சாலைக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறையினரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருக்கடையூர்:
கொள்ளிடம் முதல் பொறையாறு வரை என்.எச். 45ஏ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம் மற்றும் வீடுகள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், மேல் முறையீட்டிற்கான விசாரணை நடத்தாமலும், குடியிருப்புகளை இடித்து சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பின்றி திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பு போட்ட சாலையில் உள்ள வீடு, மரம் மற்றும் நிலங்களை பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த வந்தபோது பணியை செய்யவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X