என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விவசாயியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை: கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானது
Byமாலை மலர்11 Dec 2021 8:53 AM GMT (Updated: 11 Dec 2021 8:53 AM GMT)
விவசாயியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் குப்பத்து மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 86), விவசாயி. சம்பவத்தன்று இவர் இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, செல்வநாதனை கத்திமுனையில் கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் ஆகியோர் உத்தரவின்படியும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளை நடத்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, கொள்ளையர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளையர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவுக்கான இணைப்பை மட்டும் துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
ஹார்டுடிஸ்கை எடுத்துச் செல்லவில்லை. இதனால் அந்த ஹார்டுடிஸ்கில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி இருக்கிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் 20 முதல் 25 வயதுடையவர்கள். கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரது கையில் சின்னா என பச்சை குத்தப்பட்டுள்ளது. ஆகவே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை புகைப்படமாக மாற்றி கிராமம் தோறும் கொடுத்து கொள்ளையர்கள் பற்றி விசாரித்து வருகிறோம். மேலும் இந்த கொள்ளை கும்பல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும். கூடிய விரைவில் இந்த கொள்ளை கும்பல் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X