search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் பலி
    X
    சிறுவன் பலி

    சாத்தூர் வைப்பாற்றில் மூழ்கி சிறுவன் பலி

    சாத்தூர் அருகே வைப்பாற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காட்டுபுதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதில் 3-வது மகன் ஹரிகரபிரபு (வயது14). வீட்டின் அருகே இருக்கும் வைப்பாற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது அவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். இதனால் தண்ணீரில் மூழ்கிய அவனை காப்பாற்ற நண்பர்கள் விரைந்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தீயணைப் புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆற்று பகுதி முழுவதும் தேடினர். அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை ஹரிஹர பிரபு உடல் ஆற்றின் கரையோரம் இருந்த முள் புதரில் சிக்கி கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×