search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு

    ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

    வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு ஜெயக்குமார் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து திருட்டு கும்பலை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×