search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்ற காட்சி.
    X
    விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்ற காட்சி.

    உடுமலையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம்

    இந்த விழிப்புணர்வு நடை பயணத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை வகித்தார்.
    மடத்துக்குளம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி ரெயில் நிலையம் வரை விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நடை பயணத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். மேலிடப் பொறுப்பாளர் மகேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து, மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாவட்ட துணைத்தலைவர் கிட்டுசாமி, பலராமன், உடுமலை நகர தலைவர் ரவி, வட்டார தலைவர் கனகராஜ், வெங்கடேசன், கணேசமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜோதிசுப்பிரமணியம், சின்னசாமி, வெற்றிவேல்குமார், சிறுபான்மைப் பிரிவு தலைவர் மஜீத் மற்றும் நகர, வட்டார, சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×