search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    காரைக்குடி அருகே கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது

    காரைக்குடி அருகே கொள்ளை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் கண்டனூரில் கடந்த ஜூலை மாதம் வயதான தம்பதியினரை கட்டிப்போட்டு 45 பவுன் தங்க நகைகள் வைரம் மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (வயது 20) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×