என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரியின் பதிவு சான்றிதழை வைத்து மோசடி - வாலிபர் கைது
Byமாலை மலர்29 Nov 2021 7:19 AM GMT (Updated: 29 Nov 2021 7:19 AM GMT)
போலீசார் லாரியின் பதிவுச் சான்றிதழை வைத்து மோசடியில் ஈடுபட்ட கவின் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
திருச்செங்கோட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கவின்குமார் (வயது 29). இவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிலையத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் லாரியை லீசுக்கு எடுத்து பிற நிறுவனங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாதப்பூரை சேர்ந்த கதிர் என்பவரிடம் லாரியின் பதிவு சான்றிதழை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடன் மற்றும் வட்டி செலுத்தாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிர் லாரியை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் தொழிற்சாலை மேலாளர் வினித் (29) கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் லாரியின் பதிவுச் சான்றிதழை வைத்து மோசடியில் ஈடுபட்ட கவின் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X