என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மடத்துக்குளம்,பல்லடம் அருகே மழையால் வீடுகள் இடிந்து சேதம்-பெண் பலி
Byமாலை மலர்28 Nov 2021 7:54 AM GMT (Updated: 28 Nov 2021 7:54 AM GMT)
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது குடும்பத்தினர் இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கன மழையால் நள்ளிரவில் திடீரென வீட்டின் சுவர்இடிந்து விழுந்தது.
இதில் ரங்கசாமியின் மனைவி காளியம்மாள் (61), அவரது உறவினர் சசிகுமார்(27) ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னர்கோவையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளியம்மாள் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் காளியம்மாள் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த சசிகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தில் உள்ள காலனி பகுதியில் வசிக்கும் மாகாளி( வயது 38) என்பவரது ஓட்டு வீடு தொடர் மழையால் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக மாகாளி, அவரது மனைவி சிவகாமி இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X