என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு
Byமாலை மலர்28 Nov 2021 7:17 AM GMT (Updated: 28 Nov 2021 7:17 AM GMT)
35 வயதை கடந்த இருபாலரும் போட்டியில் பங்கேற்கலாம். 85 வயது வரை பங்கேற்க அனுமதி உண்டு.
திருப்பூர்:
அவிநாசி அணைப்புதூரில் நடக்கும் மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அணைப்புதூர் அருகில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் வருகிற டிசம்பர் 5-ந்தேதி மாவட்ட மூத்தோர் தடகள போட்டி நடக்கிறது. 35வயதை கடந்த இருபாலரும் போட்டியில் பங்கேற்கலாம். 85 வயது வரை பங்கேற்க அனுமதி உண்டு.
ஒரு போட்டியாளர் அதிகபட்சம் 3 போட்டியில் பங்கேற்கலாம். 100,200, 400, 800,1500, 5000 மீட்டர் ஓட்டம், 80,100, 110, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 5 கி.மீ., நடைபோட்டி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு 99444 22299 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X