search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு

    35 வயதை கடந்த இருபாலரும் போட்டியில் பங்கேற்கலாம். 85 வயது வரை பங்கேற்க அனுமதி உண்டு.
    திருப்பூர்:

    அவிநாசி அணைப்புதூரில் நடக்கும் மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அணைப்புதூர் அருகில் உள்ள டீ பப்ளிக்  பள்ளியில் வருகிற டிசம்பர் 5-ந்தேதி மாவட்ட மூத்தோர் தடகள போட்டி நடக்கிறது. 35வயதை கடந்த இருபாலரும் போட்டியில் பங்கேற்கலாம். 85 வயது வரை பங்கேற்க அனுமதி உண்டு.

    ஒரு போட்டியாளர் அதிகபட்சம் 3 போட்டியில் பங்கேற்கலாம். 100,200, 400, 800,1500, 5000 மீட்டர் ஓட்டம், 80,100, 110, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 5 கி.மீ., நடைபோட்டி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல்,  நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.

    மேலும் விவரங்களுக்கு 99444 22299 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×