search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வயது வரம்பு உயர்வு-திருப்பூர் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைகழக விளையாட்டுப்போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் பல்கலைக்கழகம், மண்டலம், அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் பங்கேற்கும் மாணவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைகழக விளையாட்டுப்போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை.

    இதனால் 2019-2021 வரை படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில் நடப்பு கல்வியாண்டு மட்டும் (2021-2022) தேசிய  பல்கலைக்கழகங்களுக்கு  இடையேயான போட்டியில் பங்கேற்பதற்கான வயது வரம்பை 26 ஆக உயர்த்தி இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட கல்லூரி விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×