என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை பள்ளி ஆசிரியருக்கு டாக்டர் பட்டம்
Byமாலை மலர்23 Nov 2021 8:07 AM GMT (Updated: 23 Nov 2021 8:07 AM GMT)
ஆசிரியை விஜயலட்சுமிக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தினர், நூலகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உடுமலை:
அமெரிக்காவில் வாஷிங்டன் மேரிலேண்ட்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் சிறந்த நூல்களுக்கு விருது மற்றும் முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது.
விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சாந்தி ஓமகுண்டம் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி கணேசன், எழுத்தாளர் ரஜத் எழுதிய ரத்தத்தின் ரத்தமே எம்.ஜி.ஆர். வரலாறு என்ற புத்தகத்திற்கு சிறந்த நூலுக்கான விருதை வழங்கினார்.
தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் சிறந்த நூல்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் நடந்தது.
இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி புவியியல் ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற விஜயலட்சுமிக்கு அவரது கல்வி மற்றும் வரலாறு சார்ந்த சேவையை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டமும் வரலாற்று ஆய்வு அறிஞர் விருதும் வழங்கப்பட்டது.
அவரை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தினர், நூலகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X