என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்23 Nov 2021 7:38 AM GMT (Updated: 23 Nov 2021 7:38 AM GMT)
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). இவருக்கு ரூபாதேவி என்ற மனைவியும், ஹரி விக்னேஷ் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகமும், ரூபாதேவியும் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஹரி விக்னேஷ் குரும்பலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நந்தினி தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்ற விட்டனர். ஹரி விக்னேஷ் கல்லூரிக்கும், நந்தினி பள்ளிக்கும் சென்று விட்டனர்.
ஹரி விக்னேஷ் கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஹரி விக்னேஷ் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், ரூபாதேவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததும், மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.7,500 ஆகியவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). இவருக்கு ரூபாதேவி என்ற மனைவியும், ஹரி விக்னேஷ் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகமும், ரூபாதேவியும் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஹரி விக்னேஷ் குரும்பலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நந்தினி தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்ற விட்டனர். ஹரி விக்னேஷ் கல்லூரிக்கும், நந்தினி பள்ளிக்கும் சென்று விட்டனர்.
ஹரி விக்னேஷ் கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஹரி விக்னேஷ் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், ரூபாதேவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததும், மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.7,500 ஆகியவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X