search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பயிருக்கு தேவையான பரிந்துரை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்-விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

    சம்பா பருவத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதி கடைகளில் கணக்கெடுப்பு நடத்தி போதிய அளவு உரங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சம்பா பருவத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் விளைச்சலை அதிகரிக்க உரங்கள் அத்தியாவசியமானது. மடத்துக்குளம் பகுதி கடைகளில் கணக்கெடுப்பு நடத்தி போதியஅளவு உரங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    யூரியா 100 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 40 மெட்ரிக் டன், எம்.ஓ.பி., 15 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 213 மெட்ரிக் டன், சூப்பர் உரம் 30 மெட்ரிக் டன் ஆகியவை மடத்துக்குளம் பகுதியிலுள்ள உரக்கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளன. 

    தேவையான விவசாயிகள் அணுகி உரங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் கொடுத்து உரங்களை வாங்க வேண்டும். விற்பனை ரசீது கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×