என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு- 3 பேர் கைது
Byமாலை மலர்20 Nov 2021 12:05 PM GMT (Updated: 20 Nov 2021 12:05 PM GMT)
திண்டுக்கல் அருகே வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இதே பகுதியை சேர்ந்தவர் ஹரி பாலாஜி (20). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று சிறுமலை பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பாலமரத்துபட்டியை சேர்ந்த பிரசன்னா (26), தனபால் (25), கார்த்திக் (26) என்பதும் முன்விரோதம் காரணமாக மாணிக்கம், ஹரி பாலாஜியை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து பிரசன்னா, தனபால், கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X