search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேலூர் அருகே லாரி மீது பைக் மோதி தொழிலாளி மரணம்

    வேலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கட்டிட பணிக்கு கம்பி வேலை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா. தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

    தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்தி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அன்பூண்டி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    பைக்கில் வேகமாக வந்த கார்த்தி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தி தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×