என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே கனமழைக்கு இடிந்த அரசு பள்ளி கட்டிடம்
Byமாலை மலர்18 Nov 2021 8:29 AM GMT (Updated: 18 Nov 2021 8:29 AM GMT)
கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணாதி ராயபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி கட்டிடத்தின் சுற்றுவர் மழையில் நனைந்து சேதமடைந்தது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. வாணாதிபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இதன் காரணமாக அந்த பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின்காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று வாணாதிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.
கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணாதி ராயபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி கட்டிடத்தின் சுற்றுவர் மழையில் நனைந்து சேதமடைந்தது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. வாணாதிபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இதன் காரணமாக அந்த பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின்காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று வாணாதிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.
கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X