search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேலும் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: கல்லூரிகளுக்கு?

    சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வானம் மேகமூட்டமாக உள்ளது.

    ராணிப்பேட்டையில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
    Next Story
    ×