என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேத்துப்பட்டு தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் ரவுடி எண்ணூர் மோகன் கைது
Byமாலை மலர்17 Nov 2021 7:43 AM GMT (Updated: 17 Nov 2021 7:43 AM GMT)
சென்னை சேத்துப்பட்டு தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் ரவுடி எண்ணூர் மோகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மூசா. தொழில் அதிபரான இவர் செம்மரக்கட்டைகளை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த மாதம் வீட்டில் இருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மூசாவின் மகன் பஷீரை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியது. கடைசியாக ரூ.25 லட்சம் கொடுத்தால் மூசாவைவிட்டு விடுவதாக கூறிய கடத்தல் கும்பல் எழும்பூருக்கு வந்த போது சிக்கியது. இது தொடர்பாக பெண் உள்பட சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் வழக்கில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி போலீசார் மேலும் விசாரித்தனர். அப்போது எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி மோகனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
எண்ணூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் மோகன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.`
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மூசா. தொழில் அதிபரான இவர் செம்மரக்கட்டைகளை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த மாதம் வீட்டில் இருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மூசாவின் மகன் பஷீரை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியது. கடைசியாக ரூ.25 லட்சம் கொடுத்தால் மூசாவைவிட்டு விடுவதாக கூறிய கடத்தல் கும்பல் எழும்பூருக்கு வந்த போது சிக்கியது. இது தொடர்பாக பெண் உள்பட சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் வழக்கில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி போலீசார் மேலும் விசாரித்தனர். அப்போது எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி மோகனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
எண்ணூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் மோகன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.`
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X