search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பல்லடத்தில் சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள்

    ஸ்கள் வருவதால் கடை அமைத்துள்ள வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் பயணிகள் ஏறுவதும் இறங்குவதும் எளிது.
    பல்லடம்:

    திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பல்லடம் வழித்தடமாக உள்ளது. தொலை தூர பஸ்கள் பல்லடம் வழியாக வரும்போது பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வது வழக்கம். 

    அவ்வாறு பஸ்கள் வருவதால் கடை அமைத்துள்ள வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் பயணிகள் ஏறுவதும் இறங்குவதும் எளிது. ஆனால் தொலைதூரம் செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பயணிகளை சாலையிலேயே ஏற்றி இறக்கி செல்கின்றன.  

    இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதுடன், என்.எச்., சாலையில் காத்திருக்கும் பயணிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதை போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×