search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    காரமடையில் மொபட்- கார் மோதி விபத்து: மனைவியின் வளைகாப்பு அன்று வாலிபர் பலி

    மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) தொழிலாளி. இவரது மனைவி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தனது மொபட்டில் மனைவியை அழைத்து கொண்டு புங்கம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை விட்டுவிட்டு குருந்தமலை கோவிலின் பின்புறம் உள்ள சாலையின் வழியே தனது மொபட்டில் வந்தார்.

    அந்த வழியாக வந்த போது புங்கம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (65) என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு கணுவாய்ப்பாளையம் நோக்கி வந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சக்திவேல் ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. சக்திவேலும், மனோகரனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த மனோகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×