என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரமடையில் மொபட்- கார் மோதி விபத்து: மனைவியின் வளைகாப்பு அன்று வாலிபர் பலி
Byமாலை மலர்16 Nov 2021 11:33 AM GMT (Updated: 16 Nov 2021 11:33 AM GMT)
மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) தொழிலாளி. இவரது மனைவி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தனது மொபட்டில் மனைவியை அழைத்து கொண்டு புங்கம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை விட்டுவிட்டு குருந்தமலை கோவிலின் பின்புறம் உள்ள சாலையின் வழியே தனது மொபட்டில் வந்தார்.
அந்த வழியாக வந்த போது புங்கம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (65) என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு கணுவாய்ப்பாளையம் நோக்கி வந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சக்திவேல் ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. சக்திவேலும், மனோகரனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த மனோகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X