search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிக மகசூல் பெற மண் பரிசோதனை மூலம் உரமிட வேண்டும் - வேளாண்துறை அறிவுறுத்தல்

    சம்பா சாகுபடியில் பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என இரண்டு பருவத்தில் இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது. சம்பா சாகுபடி அக்டோபர், நவம்பரில் நடவு செய்யப்பட்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி தொடக்கத்தில் அறுவடை நடக்கும்.

    தற்போது கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் 6,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

    சம்பா சாகுபடியில், பாரம்பரிய முறைகளான நேரடி விதைப்பு, நாற்றங்கால் முறை நடவு, வரிசை நடவு உள்ளிட்ட முறைகளில் நெல் விதைப்பு நடந்துள்ளது. இந்த பயிர்கள் ஆரோக்கியமாக வளர உரமிடுதல் மிக முக்கியமானதாகும்.

    இதுகுறித்து வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:

    மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் உரங்கள் இடுவதால் தேவையற்ற இடுபொருள் செலவுகள் தவிர்க்கலாம். ரசாயன கரிம எருக்கள், பசுந்தாள் உரம், பயிர்களின் கழிவுகள் போன்றவற்றால் மண் வளம் அதிகரிக்கும்.

    அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இடுவதால் மண்வளம் பாதுகாக்கப்படும். முதன்மை தாவர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளுடன் மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச் சத்துக்களையும் சேர்க்கும். மகசூல் பெருகும் என்றார்.
    Next Story
    ×