search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவை அருகே ஜீப் மீது கார் மோதல் - முதியவர் பலி

    கோவை அருகே ஜீப் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது72). இவரது மகன் மகேந்திரன்(28). இவரது மனைவி சங்கீதா(27). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு கோவையிலிருந்து கிணத்துக்கிடவு நோக்கி காரில் சென்றனர். காரை மகேந்திரன் ஓட்டினார். மற்ற 2 பேர் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    இவர்களது கார் மதுக்கரை ரோட்டில் சென்ற போது மகேந்திரன் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த ஜீப் மீது மகேந்திரனின் கார் மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர். 

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவசாமி சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×