என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே ஜீப் மீது கார் மோதல் - முதியவர் பலி
குனியமுத்தூர்:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது72). இவரது மகன் மகேந்திரன்(28). இவரது மனைவி சங்கீதா(27). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு கோவையிலிருந்து கிணத்துக்கிடவு நோக்கி காரில் சென்றனர். காரை மகேந்திரன் ஓட்டினார். மற்ற 2 பேர் பின்னால் அமர்ந்திருந்தனர்.
இவர்களது கார் மதுக்கரை ரோட்டில் சென்ற போது மகேந்திரன் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த ஜீப் மீது மகேந்திரனின் கார் மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.
இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவசாமி சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்