என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில் சோதனை செய்ய போலீசார் திட்டம்
Byமாலை மலர்13 Nov 2021 9:50 AM GMT (Updated: 13 Nov 2021 2:42 PM GMT)
கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது சிவசங்கர் பாபா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தொடர்ந்து அவர் சிறையிலேயே உள்ளார்.
இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் அறையில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதலில் தமிழ்நாடு போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி கைது செய்தனர்.
தற்போது சிவசங்கர் பாபா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தொடர்ந்து அவர் சிறையிலேயே உள்ளார்.
இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் அறையில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.... சென்னையில் 2 தினங்களில் 3,046 மின் புகார்களுக்கு தீர்வு- மின்சார வாரியம் தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X