search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி
    X
    அமைச்சர் செந்தில் பாலாஜி

    வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேங்கியது - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

    தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    பலத்த மழை காரணமாக மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    இதற்கிடையே வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அவர், அனல் மின் நிலையத்தில் உள்ள கிடங்கில் நிலக்கரி இருப்பு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிலக்கரி இருப்பு, மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் 400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாதிக்கும் மின் உற்பத்தி அளவை தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மழைக்காலங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அவற்றை உடனடியாக மாற்றும் வகையில் 1 லட்சத்து 32 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்னரே பழுதடைந்த 25 ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மின்கம்பம்

    அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான வகையில் சூரிய மின்சக்தி, நீர், கேஸ் மின்உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆட்சியில் மழை காலத்தில் மின் விநியோகம் பல நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழையால் ஏற்படும் பாதிப்பை ஒரே நாளில் சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...மழை சேதம்: மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க விபர அறிக்கை- அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவு

    Next Story
    ×