என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் அருகே பி.ஏ.பி.,வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர் பிணம்
Byமாலை மலர்11 Nov 2021 7:20 AM GMT (Updated: 11 Nov 2021 7:20 AM GMT)
பி.ஏ.பி.,வாய்க்காலில் கடந்த சில மாதங்களாக பிணங்கள் மிதந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
குண்டடம்:
குண்டடம் அருகே உள்ள எருக்கலாம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண்பிணம் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ஏ.பி.,வாய்க்காலில் கடந்த சில மாதங்களாக பிணங்கள் மிதந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்று தெரியவில்லை.
வாய்க்காலில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக உயிரிழக்கின்றனரா? அல்லது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்படுகிறார்களா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X