search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் அருகே பி.ஏ.பி.,வாய்க்காலில் மிதந்து வந்த முதியவர் பிணம்

    பி.ஏ.பி.,வாய்க்காலில் கடந்த சில மாதங்களாக பிணங்கள் மிதந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
    குண்டடம்:

    குண்டடம் அருகே உள்ள எருக்கலாம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண்பிணம் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். 

    பின்னர் உடலை  மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பி.ஏ.பி.,வாய்க்காலில் கடந்த சில மாதங்களாக பிணங்கள் மிதந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

    வாய்க்காலில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக உயிரிழக்கின்றனரா? அல்லது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்படுகிறார்களா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×