என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்10 Nov 2021 11:24 AM GMT (Updated: 10 Nov 2021 11:24 AM GMT)
மகளின் புனித நீராட்டு விழாவில் மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 31). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் ஏராளமானோர் வீட்டிற்கு வந்து இருந்தனர். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த செல்லமுத்து மது போதையில் வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
உறவினர் மத்தியில் தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதால் செல்லமுத்து மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்லமுத்துவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 31). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் ஏராளமானோர் வீட்டிற்கு வந்து இருந்தனர். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த செல்லமுத்து மது போதையில் வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
உறவினர் மத்தியில் தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதால் செல்லமுத்து மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்லமுத்துவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X