என் மலர்

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மழையில் மோட்டார் சைக்கிள் சறுக்கி வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை அன்னூர் அருகே மழையில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை அன்னூர் அடுத்த மாசகவுண்டன் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் காபி கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று சதீஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையத்தில் இருந்து கருவலூர் ரோட்டில் வந்தார்.

    அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சதீஷ்குமார் கீழே விழுந்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×