என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் மரணம்
Byமாலை மலர்6 Nov 2021 11:14 AM GMT (Updated: 6 Nov 2021 11:14 AM GMT)
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் சரவணன் என்கிற மனோகரன் (வயது 50). இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 4-ந்தேதி சிறையில் இருந்த இவருக்கு திடீரென வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனை பார்த்த சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டாக்டர் மூலமாக சரவணனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் சரவணன் என்கிற மனோகரன் (வயது 50). இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 4-ந்தேதி சிறையில் இருந்த இவருக்கு திடீரென வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனை பார்த்த சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டாக்டர் மூலமாக சரவணனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X