என் மலர்
செய்திகள்

மூதாட்டி பலி
பொட்டல்புதூரில் கால்வாயில் குளிக்க சென்ற மூதாட்டி பலி
பொட்டல்புதூரில் கால்வாயில் குளிக்க சென்ற மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
பொட்டல்புதூரை சேர்ந்தவர் முகம்மது. இவரது மனைவி பமிமா பேகம் (வயது 80). இவர் தினமும் வீட்டின் பின்புறம் உள்ள ராமநதி கால்வாயில் குளிக்க செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம்போல் கால்வாயில் குளிக்க சென்றார்.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கால்வாயில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கால்வாய் கரையோரம் அவரது உடல் ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story