என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு- தனபாலிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை
Byமாலை மலர்2 Nov 2021 10:07 AM GMT (Updated: 2 Nov 2021 10:07 AM GMT)
செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து தனிப்படையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் வழக்கும் மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் ஆதாரங்கள், சாட்சியங்களை அழித்ததாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 பேரையும் தனிப்படையினர் காவலில் எடுத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் தனபாலின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடுதல் அவகாசம் கேட்டனர்.
நீதிபதி தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
மேலும் செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய தகவல்கள் இந்த வழக்கில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் வழக்கும் மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் ஆதாரங்கள், சாட்சியங்களை அழித்ததாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 பேரையும் தனிப்படையினர் காவலில் எடுத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் தனபாலின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடுதல் அவகாசம் கேட்டனர்.
நீதிபதி தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
மேலும் செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய தகவல்கள் இந்த வழக்கில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X