என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் கல்வியை விட வகுப்பறை கல்வியே சிறந்தது - மாணவர்கள் பேட்டி
Byமாலை மலர்1 Nov 2021 11:19 AM GMT (Updated: 1 Nov 2021 11:19 AM GMT)
கொரோனா காரணமாக 19 மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாததால் தோழிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்கள், தோழிகளை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
6-ம்வகுப்பு மாணவி தர்ஷனா கூறுகையில்:
கொரோனா காரணமாக 19 மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாததால் எனது தோழிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று தோழிகள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தாலும் வகுப்புகளுக்கு சென்று படிப்பதுதான் நன்றாக உள்ளது. ஆசிரியர்களிடம் சந்தேங்களை கேட்க முடியும் என்றார்.
2ம் வகுப்பு மாணவி திவ்யா கூறுகையில், பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளேன். வீட்டிலேயே இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தது. இப்போது பள்ளிக்கு வந்துள்ளது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அவிநாசியை சேர்ந்த 7-ம்வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில், ஆன்லைன் மூலம் சரியாக பாடங்களை படிக்க முடியவில்லை. இணையதளத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோருக்கு சுமை குறைந்துள்ளது என்றார்.
திருப்பூர் மாணவன் ஹரிஹரன் கூறுகையில், இன்று பள்ளிக்கு சென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விட்டு விடுவார்களோ என்று கவலையில் இருந்தேன். ஆனால் மழை லேசாக பெய்து நின்றுவிட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல முடிந்தது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X