என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு - காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சாதனை
Byமாலை மலர்30 Oct 2021 1:12 PM GMT (Updated: 30 Oct 2021 1:12 PM GMT)
பாலிதீன் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சித்த மருத்துவர் சாதனை படைத்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் தீபமலை ஆன்மிக தொண்டு இயக்கம் ஆகியவை இணைந்து பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நீதிபதி கிருபாநிதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி முன்னிலை வகித்தார்.
இதில் சித்த மருத்துவர் ராஜாஹரிகோவிந்தன் (வயது 44) என்பவர் பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரில் கயிறு கட்டி விரல் மற்றும் பற்களால் கடித்து இழுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அவரது சாதனையை பலர் பாராட்டினர்.
முடிவில் யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X