என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெரம்பலூர் மாவட்டத்தில் மழை](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110301351488011_Tamil_News_Tamil-News-Northeast-monsoon-heavy-rain-in-Perambalur_SECVPF.gif)
X
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதலாக 237.36 மில்லி மீட்டர் மழை
By
மாலை மலர்30 Oct 2021 8:21 AM GMT (Updated: 30 Oct 2021 8:21 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 805.36 மி.மீ. மழை பெய்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியதால், அவை நிரம்பி வருகின்றன. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போதும், வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பியவர்களும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. பகல் நேரத்தில் வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 568 மி.மீ. ஆனால் பெய்த மழையளவு 805.36 மி.மீ. ஆகும். இதன்படி கூடுதலாக 237.36 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியதால், அவை நிரம்பி வருகின்றன. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போதும், வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பியவர்களும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. பகல் நேரத்தில் வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 568 மி.மீ. ஆனால் பெய்த மழையளவு 805.36 மி.மீ. ஆகும். இதன்படி கூடுதலாக 237.36 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)