என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
Byமாலை மலர்27 Oct 2021 2:49 AM GMT (Updated: 27 Oct 2021 2:49 AM GMT)
புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
புதுச்சேரி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இது ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அக விலைப்படி உயர்வுக்கான நிலுவைத்தொகை வருகிற நவம்பர் மாதம் வழங்கப்படும்.
இதன்மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பஞ்சப் படியை உயர்த்தி அரசாணை வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அதனை அமல்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இது ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அக விலைப்படி உயர்வுக்கான நிலுவைத்தொகை வருகிற நவம்பர் மாதம் வழங்கப்படும்.
இதன்மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பஞ்சப் படியை உயர்த்தி அரசாணை வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அதனை அமல்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X